ஆதார் கார்டு சேவைகள் நிறுத்தம்? கடும் சிரமத்தில் மக்கள்!

0
ஆதார் கார்டு சேவைகள் நிறுத்தம்? கடும் சிரமத்தில் மக்கள்!
ஆதார் கார்டு சேவைகள் நிறுத்தம்? கடும் சிரமத்தில் மக்கள்!
ஆதார் கார்டு சேவைகள் நிறுத்தம்? கடும் சிரமத்தில் மக்கள்!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் ஆதார் அமைப்பு முக்கிய சில அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கடும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது

ஆதார் கார்டு:

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கிய ஆதாரமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. வங்கிக் கணக்கு, சிலிண்டர் கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்து ஆவணங்களையும் கட்டாயமாக ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டுமென அரசு அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இத்தகைய ஆதார் கார்டை பிழையில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை உடனே சரிசெய்து கொள்ளும்படியான வசதியை ஆதார் அமைப்பு வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண் மற்றும் கைரேகை பதிவு போன்ற முக்கியமான அப்டேட்களை ஆதார் மையத்திற்கு நேரடியாக சென்று திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் கார்டில் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால் ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் அமைப்பு இரண்டு முக்கிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆதார் கார்டில் உள்ள முகவரியை மாற்றம் செய்வதற்கான address validation letter என்கிற ஆப்சன் அடுத்த அறிவிப்பு வரும் வரைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த முறையை பயன்படுத்தி திருத்தம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்ட்டேக் மோசடி குறித்து வைரலாகும் வீடியோ – பேடிஎம் நிறுவனம் விளக்கம்! மக்கள் கவனத்திற்கு!

இதனால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வேலை மாற்றம் காரணமாக வேறு பகுதிகளுக்கு செல்லும் போது ஆதார் கார்டில் அந்த முகவரியை பதிவிட முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஆதார் கார்டின் பழைய பிரிண்ட் அவுட்டை இனி வாடிக்கையாளர்கள் எடுக்க முடியாது எனவும், பிவிசி எனப்படும் பிளாஸ்டிக் கார்டை மட்டுமே பிரிண்ட் எடுக்க முடியும் எனவும் ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது. இரண்டு முக்கிய அப்டேட்களை ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!