நாட்டில் இரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல் – அரசு செய்தி தொடர்பாளர் தகவல்!
இலங்கை நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக அதிபர் பதிவு விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது வரை தொடரும் இந்த போராட்டத்தால் இன்று இரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வர இருப்பதாக அரசு செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.
இலங்கை:
நமது நாட்டின் அண்டை நாடான இலங்கையில், தற்போது பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் போனதால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், உணவு பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நாட்டில் தினம்தோறும் 12 மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாகன எரிபொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி காலையில் சிற்றுண்டி!
இந்த நிலையில் நாட்டில் இவ்வாறு ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சீர்கெடுக்கு அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பம் தான் காரணம் என்று அந்நாட்டின் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தற்போது இயங்கி வரும் அரசு பதவி விலக கோரி பொது மக்களும், மாணவர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் தங்கள் சார்பில் போராட்டம் செய்யும் மக்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை போன்றவற்றை செய்து அவர்களை விரட்ட பார்த்தனர். ஆனால் மக்கள் எதற்கும் சலிக்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இவ்வாறு போராட்டம் நடைபெற்று வரும் காரணத்தால் தொடர்ந்து அங்கு அரசின் சார்பில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது அதிபர் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வர இருப்பதாகவும், மேலும் ராணுவத்துக்கு கூடுதலான அதிகாரங்கள் தரப்பட்டு இருப்பதாகவும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.