இன்று முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
போபால் மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த தளர்வுகள் ஹோட்டல் மற்றும் ஜிம்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
மத்திய பிரதேசத்தில் கோவிட் -19 பாதிப்புகள் புதன்கிழமை நிலவரப்படி, 453 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு இதுவரை பாதிப்பு உறுதியானவர் எண்ணிக்கை 7,86,755 ஆக பதிவாகியுள்ளது. மேலும், 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 8,441 ஐ எட்டியுள்ளது. போபால் மாவட்டத்தில் மட்டும் நேற்று 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அங்கு 1,22,310 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக தலைமை செயலர் இறையன்பு அவர்களின் உணவு பழக்கம் – வியக்க வைத்த உத்தரவு!
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 1ம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டது. தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. போபாலில் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங், இன்று முதல் போபாலில் சந்தைகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசியை அனைத்து கடைக்காரர்களும் அவர்களது ஊழியர்களும் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இன்று முதல் கடைகள் திறக்கப்பட்டாலும், கடைக்காரர்கள் கொரோனா தடுப்பு நெறிமுறைகளையும், சமூக இடைவெளியையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், ஜிம்களுக்கு இந்த தளர்வுகள் பொருந்தாது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், மத்தியப் பிரதேச அரசு மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து சேவைகளை ஜூன் 15 வரை தடை செய்வதாக அறிவித்துள்ளது.