தமிழக தலைமை செயலர் இறையன்பு அவர்களின் உணவு பழக்கம் – வியக்க வைத்த உத்தரவு!
தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் ஆய்விற்காக மாவட்டங்களுக்கு வரும் போது ஆடம்பர உணவுகள் ஏற்பாடு செய்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலாளர் உத்தரவு:
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரம் பெற்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். பல நலத்திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
ஐசிசி டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியல் – ஜடேஜா முன்னேற்றம்!!
இவர் தமிழக மக்களுக்கு மிகவும் பரிட்சையமானவர். மேலும் எழுத்தாளர், கல்வியாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவர். தமிழ் மொழி மீது தீராத பற்றுடையவர், சிறந்த நிர்வாக திறமை பெற்றவர். அதன்படி தமிழகத்தின் தலைமை செயலாளராக பதவியேற்றது முதலே சிறப்பான நடவடிக்கைகளை இறையன்பு அவர்கள் மேற்கொண்டு உள்ளார். கொரோனா தடுப்பு பணியில் முழுவீச்சில் செயலாற்றி வருகிறார்.
TN Job “FB Group” Join Now
இவர் சில நாட்களுக்கு முன் நான் எழுதிய புத்தகங்களை எந்த அழுத்தம் வந்தாலும் தான் தலைமை செயலாளராக பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் அரசு சார்பில் வாங்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். மேலும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்வதை தவிர்த்து விடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச செயலாளர் இறையன்பு தற்போது உத்தரவிட்டுள்ளார். மேலும் பயணத்தின் போது, சாதாரண சைவ உணவுகளே போதுமானது தினமும் இரண்டு காய்கறிகளுடன் உண்பதே ஆரோக்கியமானது என்று கூறியுள்ளார்.