ஜூலை 25 முதல் பூங்காக்கள், மத வழிபாட்டு தலங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையடுத்து, முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து நாளை (ஜூலை 25) முதல் கூடுதல் தளர்வுகளை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வுகள்
முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள கொரோனா புதிய பாதிப்புகளின் நிலையை ஆய்வு செய்த பின்னர் முழு ஊரடங்கில் இருந்து மேலும் சில தளர்வுகளை அளிப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாளை (ஜூலை 25) முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள், மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த வாரத்தில், கர்நாடக அரசு இரவு ஊரடங்கு உத்தரவின் கால நேரத்தை ஒரு மணி நேரம் தளர்த்தியது.
100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் ரூ.300 ஆக உயர்வு? தமிழக அரசு நடவடிக்கை!
மேலும் சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ள நிலையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை ஜூலை 26 முதல் தொடங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலம் முழுவதும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் பிற மத இடங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தொடர்பான நடவடிக்கைகள் ஜூலை 25 முதல் அனுமதிக்கப்படுகின்றன.
தீவிரமடையும் கொரோனா தொற்று, வார இறுதி ஊரடங்கு அமல் – மாநில அரசு நடவடிக்கை!
இங்கு வரும் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர பொழுதுபோக்கு பூங்காக்கள் முறையான தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், நீர் விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படவில்லை. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 1,705 புதிய பாதிப்புகள் மற்றும் 30 இறப்புகள் பதிவாகியுள்ளன.