தீவிரமடையும் கொரோனா தொற்று, வார இறுதி ஊரடங்கு அமல் – மாநில அரசு நடவடிக்கை!

0
தீவிரமடையும் கொரோனா தொற்று, வார இறுதி ஊரடங்கு அமல் - மாநில அரசு நடவடிக்கை!
தீவிரமடையும் கொரோனா தொற்று, வார இறுதி ஊரடங்கு அமல் - மாநில அரசு நடவடிக்கை!
தீவிரமடையும் கொரோனா தொற்று, வார இறுதி ஊரடங்கு அமல் – மாநில அரசு நடவடிக்கை!

மாநிலம் முழுவதும் உள்ள கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு ஜூலை 24 சனி மற்றும் ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

முழு ஊரடங்கு

கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா புதிய பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தடுப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அதன் கீழ் ஜூலை 24 மற்றும் ஜூலை 25 ஆகிய வார இறுதி நாட்களில் முழு முடக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது. அதாவது நாடு முழுவதும் ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு விகிதம் 5 ஆயிரத்துக்கும் கீழாக பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், கேரளா மாநிலத்தில் மட்டும் புதிய பாதிப்புகள் 17 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

இந்நிலையில் மாநிலம் முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்துள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் கொரோனா தொற்று பரிசோதனைகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு மற்றும் காசராகோடு போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் திறம்பட செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CBSE 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டங்கள் குறைப்பு!

மேலும் கேரளாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளின் கீழ், மத்திய,மாநில அரசு அலுவலகங்கள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளில் 50% ஊழியர்களுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவிர வகை D பகுதிகளில் உள்ள அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கேரளாவில் இதுவரை 1,77,09,529 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 1,24,64,589 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியையும், 52,44,940 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!