மருத்துவர்களின் ஊதியம் 15 சதவீதம் உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!!
தெலுங்கனா மாநிலத்தில் மூத்த மருத்துவர்களின் ஊதியத்தை அதிகரிக்க கோரி இளநிலை மருத்துவர்கள் கொரோனா சிகிக்சை பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாத ஊதியம் மூத்த மருத்துவர்களுக்கு தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.
மருத்துவர்களின் ஊதிய உயர்வு:
நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இந்நோய் பாதிதத்தவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. நாடு முழுவதும் அதிக உயிரிழப்புகள் தினந்தோறும் ஏற்படுகிறது. மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரை காக்கும் உன்னத பணியை இரவு பகல் பாராது செய்து வருகின்றனர். தன் உயிரை பொருட்படுத்தாமல் பொது மக்கள் உயிரை காப்பாற்றுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் நோயாளிகளுக்கு சிகிக்சை அளித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவர்களின் ஊதியம் 15 சதவீதம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்து இருந்ததது. ஆனால் ஊதியம் உயர்த்தப்படவில்லை. மருத்துவர்கள் இந்த கொரோனா பணியில் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அரசு அறிவித்தது போல சம்பள உயர்வு அதிகரிக்கும் என பணியாற்றி வந்தனர். ஆனால் தெலுங்கானா அரசு அறிவித்தது போல செய்யவில்லை. மருத்துவர்களுக்கு தொடர்ந்து பழைய சம்பள முறையே பின்பற்றப்பட்டது.
தமிழக அரசு வேலை வழங்க விதிகள் வகுத்தல் – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!!
இவர்களின் ஊதியத்தை உயர்த்துமாறு மூத்த மருத்துவர்கள் கூட்டமைப்பு பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் இணைந்து இளநிலை மருத்துவர்கள் பணி புறக்கணிக்க முடிவு செய்தனர். மே 26ம் தேதி தெலுங்கானாவில் கொரோனா தொடர்பான அனைத்து அவசரகால பிரிவுகளுக்கான சிகிச்சையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மூத்த மருத்துவர்களின் சம்பளத்தொகையை 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. மூத்த பயிற்சி மருத்துவர்களின் சம்பள தொகையை மாதத்திற்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80,500 ஆக உயர்த்துவதற்கான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது.