தமிழகத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி – ஜூன் முதல் விநியோகம்!!
ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக் வி என்னும் கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசு அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ள நிலையில் வருகிற ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்புட்னிக் வி:
இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அவசரகால பயன்பாட்டிற்காக மக்களுக்கு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. இதேபோல் ரஷ்ய நாட்டில் கொரோனாவிற்கு எதிராக ஸ்புட்னிக் வி என்னும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த தடுப்பூசி அங்கு நன்கு பலன் அளித்து வருவதானால் இதனை பல்வேறு உலக நாடுகள் தங்களது நாட்டிற்கு இறக்குமதி செய்து வருகிறது. தற்போது இதனை தொடர்ந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்த இந்திய அரசு ஒப்புதல் வழங்கியது. மேலும் இதற்கான சோதனையும் இந்தியாவில் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில் தமிழகத்திற்கு வருகிற ஜூன் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவர்களின் ஊதியம் 15 சதவீதம் உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!!
அதன்படி சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் ஜூன் 2ம் வாரம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் தமிழகத்திற்கு தேவைப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தடையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.