பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பா? மாநில அரசின் ஐடியா!
கேரள மாநிலத்தில் மழை பொழிவு சற்று அதிகமாக இருக்கும். தற்போது அம்மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு, மரம் செய்தல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர்கள் அதிலிருந்து மீளுதல் போன்றவற்றை கற்பிக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை கிளப்:
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். அதே போல நடப்பாண்டும் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம் மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக அம்மாநிலத்தில் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த மழையின் காரணமாக அம்மாநிலத்தில் அவ்வப்போது மண்சரிவு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு பேரிடர் மேலாண்மை கிளப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய வைரஸ் பரவ காரணம் என்ன? சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு!!
Exams Daily Mobile App Download
நேற்று சர்வதேச பேரிடர் தினத்தை முன்னிட்டு அம்மாநில அரசு பள்ளி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையில் ‘சஜ்ஜம்’ என்ற திட்டம் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொள்ளும் வகையில் மாநிலத்தை தயார்படுத்தும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்