தமிழகத்தில் புதிய வைரஸ் பரவ காரணம் என்ன? சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பரவுவதற்கு காரணம் என்ன? என்று தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய வைரஸ்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தற்போது ஓய்ந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருக்கும். இதனால் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொசு மூலமாக பரவும் நோய்களும் அதிவேகத்தில் பரவத் தொடங்கும்.
இதில் குறிப்பாக டெங்கு காய்ச்சல் பொது மக்களிடையே அதிகம் பரவும் அபாயம் உள்ளது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் குடிநீர் தொட்டிகள், மழை நீர் தேங்கியிருக்கும் இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கொசு மருந்துகளை கொசுக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய வைரஸ் மூலமாக நோய்கள் பரவி வருகின்றன.
Google கொண்டு வந்துள்ள புதிய அம்சம் – இனி யூசர் ஐடி, பாஸ்வேர்ட் தேவையில்லை!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் புதிதாக வைரஸ் நோய் பரவும் காரணத்தை குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை அக்டோபர் 27ம் தேதி அன்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் சொந்த நலன் கருதி ஏதேனும் தவறான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்களா? என விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்