மக்களுக்கு அள்ளி கொடுக்கும் மத்திய,மாநில அரசுகள் – ரேஷன் கார்டு மட்டும் இருந்தால் போதும்! இனி ஜாலி தான்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்களின் கீழ் அதிக பலன்களை அடைந்து வரும் நிலையில் மேலும், ஒரு புதிய திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரேஷன் கார்டு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டு மக்களுக்கு வழங்கும் அனைத்து திட்டங்களையும் ரேஷன் கார்டுகள் மூலமாக தான் வழங்கி வருகிறது. மேலும், அத்தியாவசிய உணவுப்பொருளை மக்களுக்கு வழங்கி ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதற்காக இலவச மற்றும் மலிவு விலைகளில் உணவு தானியங்கள் வழங்கி வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், கொரோனா கால கட்டத்தில் மக்கள் மிகவும் கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்ததால், 2020 முதல் 2022 டிசம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்களை மத்திய அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கி வருகிறது. இதேபோல், தீபாவளி பண்டிகையின் போது மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டுதரர்களுக்கு ரூ.100 க்கு பல்வேறு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அளித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தமிழகத்திலும், கடந்த பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை, முழு கரும்பு ஒன்று, 21 மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு இலவசமாக அளிக்கப்பட்டது. இதனால் வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் அரசு சிறப்பு பரிசை அறிவிக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இருப்பினும், கடந்த ஆண்டு வழங்கிய பொருட்களின் தரம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்த காரணத்தால், வரும் ஆண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 அளிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.