10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!
பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Phase 10 Selection பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பணியாளர் தேர்வு ஆணையத்தில் (SSC) காலியாக உள்ள Phase 10 Selection Post பணிக்கு என மொத்தமாக 2065 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 10ம், 12ம் வகுப்பு மற்றும் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Phase 10 Selection Post பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
- Phase 10 Selection Post பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் Written Exam, Skill Test, PET, PST மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC / ST / PwD / ESM பிரிவை சேர்ந்த பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.