போதை பொருள் விற்பனை செய்தால் மரண தண்டனை – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

0
போதை பொருள் விற்பனை செய்தால் மரண தண்டனை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!
போதை பொருள் விற்பனை செய்தால் மரண தண்டனை - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!
போதை பொருள் விற்பனை செய்தால் மரண தண்டனை – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கொள்முதல் போன்றவை அதிகரித்து வந்தது. இதனை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருள்:

போதைப்பொருள் பயன்பாடு உலக அளவில் அதிகரித்து வருகிறது. எவ்வளவு தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் போதை பொருள் கடத்தல் கும்பல் அதனை கண்டு கொள்வதில்லை. தீவிர கண்காணிப்பு மத்தியிலும் போதை பொருட்களை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு கடத்தி வருகின்றனர்.அதனால் இலங்கையில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதாவது போதைப்பொருள் சம்மந்தப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 5 கிராமுக்கு அதிகமான போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

FD திட்ட பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் அதிரடி உயர்வு… பிரபல வங்கி அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த சட்டத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார். மேலும் சட்ட மசோதாவானது 19ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பையும் போதை பொருள் விற்பனை கும்பல் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!