செப்.13ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கானது செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு :
இலங்கையில் தற்போது பரவி வரும் வைரஸ் டெல்டா பிளஸ் வகை வைரஸ் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையில் இதுவரை 4,47,757 பேர் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் 9,604 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இலங்கை மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றால் இலங்கை மக்கள் அச்சத்தில் ஆழ்த்துள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ இல் பங்கேற்கும் பிரபலம் – வெளியான தகவல்!
பொது போக்குவரத்து, கடைகள் போன்றவைகள் இயங்க அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்றை கட்டுப்படுத்த கடந்த மாதம் 21 ம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ம் தேதி காலை 4 மணி வரையில் 10 நாட்கள் தேசிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அந்நாட்டின் கொழும்பு மாநகரில் மட்டும் 75 சதவீத பாதிப்புகள் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் இலங்கையில் தொடர்ந்து ஊரடங்கை அமலில் வைத்து வருகின்றனர். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு செப்டம்பர் 6 ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.