சிறப்பாசிரியர் பணி தேர்வு நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு – தமிழ்வழி ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கும் தேர்வர்கள்!
தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணியிடத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இப்பணியிடத்திற்கான தமிழ்வழி ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிறப்பாசிரியர்
தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பணியிடத்தில் 1,325 காலியாக இருக்கும் இடங்களை நேரடியாக நிரப்ப கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு மூலமாக கடந்த 2019ம் ஆண்டு ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் காலியிடங்களும் மற்றும் 2020ம் ஆண்டில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டது.
இந்திய அஞ்சல் துறையில் GDS பணியிடத்திற்கான தேர்வு பட்டியல் வெளியீடு – முழு விவரம் உள்ளே!
இப்பணியிடத்திற்கான தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டதில், சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த பட்டியல் பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து இப்பணியிடத்திற்கான பொதுப்பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆனால் தமிழ்வழி ஒதுக்கீடு இறுதித் தேர்வு பட்டியல் இன்னும் வெளியாகாததால் தமிழ்வழி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தி 5 ஆண்டுகள் நிறைவடைந்தும், தமிழ்வழி ஒதுக்கீடு இறுதித் தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது தேர்வர்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.