தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – ரூ. 25 லட்சம் வரை .. விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு உதவித்தொகை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விவரம் குறித்து இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு, பரிசுகளை வெல்ல வேண்டும் என்று தமிழக அரசு விளையாட்டு வீரர்கள் ஊக்கம் பெற பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதைத்தவிர இது போன்ற போட்டிகளில் வென்று கோப்பைகளை கைப்பற்றுபவர்களுக்கு அரசு சார்பில் பல லட்சம் ரூபாய் பரிசாகவும், அரசு துறைகளில் பணி வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சிறப்பு உதவித்தொகை அளிக்க இருப்பதாக விளையாட்டு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகள் முன்பதிவு – சுற்றுலா துறை அமைச்சர் தகவல்!
Exams Daily Mobile App Download
இந்த சிறப்பு உதவித்தொகையினை பெற வீரர்கள், [email protected] என்ற இணையதளத்தில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.