ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகள் முன்பதிவு – சுற்றுலா துறை அமைச்சர் தகவல்!

0
ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகள் முன்பதிவு - சுற்றுலா துறை அமைச்சர் தகவல்!
ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகள் முன்பதிவு - சுற்றுலா துறை அமைச்சர் தகவல்!
ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகள் முன்பதிவு – சுற்றுலா துறை அமைச்சர் தகவல்!

தமிழக சுற்றுலா துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அமைச்சர் மதிவேந்தன் புதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் கூறியுள்ளார்.

ஆன்லைன் பதிவு:

தமிழகத்தில் அனைத்து துறைகளும் தற்போது காலத்திற்கு ஏற்றவாறு டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுலா துறையிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பத்திரப்பதிவு துறையில் ஆன்லைன் மூலம் பத்திரங்கள் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து தமிழக மின் வாரியத்தில் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகளை ஆன்லைன் மூலம் புக் செய்யும் வசதி கொண்டு வரப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஹாப்பி நியூஸ்.. தமிழகத்தில் டிச.6ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

ஆண்டுதோறும் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து சுற்றுலா வளர்ச்சி பணி மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். அண்மையில் கொல்லிமலையில் பாராசூட் மற்றும் சாகச சுற்றுலா திட்டம் கொண்டு வரப்படும், கன்னியாகுமரி கடற்கரை விரைவில் சுற்றுலா துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!