தமிழகத்தில் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை – எஸ்பி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை - எஸ்பி அறிவிப்பு!!
தமிழகத்தில் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை - எஸ்பி அறிவிப்பு!!
தமிழகத்தில் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை – எஸ்பி அறிவிப்பு!!

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அளித்து மாவட்ட காவல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்று எதிரொலியாக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விடுமுறை

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக மே 10 முதல் 24 ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலங்களில் பொது மக்கள் அவசியம் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நோய் தொற்றுக்கு எதிராக மக்களை காக்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோருடன் காவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

கடந்த ஆண்டு, கொரோனா முதல் அலையின் போது, பொது மக்கள் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிப்பதற்கு அரசுக்கு துணையாக நின்றவர்கள் காவலர்கள் தான். அதே போல இந்த ஆண்டும் தமிழக காவல்துறையினர் கொரோனாவுக்கு எதிரான போரில் அரசுடன் துணை நிற்கின்றனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் கர்ப்பிணி காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவில் இருந்து கர்ப்பிணி காவலர்களை பாதுகாக்க அவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரையிலும் சிறப்பு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!