ஆதாருடன் மின்வாரிய எண் இணைப்பு.. நவ.28 முதல் டிச.31 சிறப்பு முகாம் – அமைச்சர் அறிவிப்பு!

0
ஆதாருடன் மின்வாரிய எண் இணைப்பு.. நவ.28 முதல் டிச.31 சிறப்பு முகாம் - அமைச்சர் அறிவிப்பு!
ஆதாருடன் மின்வாரிய எண் இணைப்பு.. நவ.28 முதல் டிச.31 சிறப்பு முகாம் - அமைச்சர் அறிவிப்பு!
ஆதாருடன் மின்வாரிய எண் இணைப்பு.. நவ.28 முதல் டிச.31 சிறப்பு முகாம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது பொதுமக்கள் அனைவரும் தங்களின் அனைத்து வகையான மின் இணைப்பு எண்களையும் ஆதார் எண்களுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு:

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு மக்களை அதிக அளவில் பாதிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பலதரப்புகளில் இருந்தும் அரசின் மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் திடீரென்று அனைத்து மின் இணைப்பு எண்களுடனும் வீடு அல்லது வணிக கட்டிடத்தின் உரிமையாளர் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Amul: பாலின் விலையை உயர்த்த திட்டமில்லை – வெளியான சூப்பரான தகவல்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், இந்த புதிய உத்தரவு குறித்து மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். இதனால் தமிழக மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மக்களுக்கு அடிக்கடி தேவையான விளக்கங்களை வெளியிட்டு வருகிறார். மேலும், இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் ஆதார் – மின் வாரிய இணைப்பு பணிகளுக்காக நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!