Amul: பாலின் விலையை உயர்த்த திட்டமில்லை – வெளியான சூப்பரான தகவல்!
நாட்டில் அதிகரித்து வரும் பணம் வீக்கம் காரணமாக பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்துவது குறித்து தற்போது எந்த ஒரு திட்டமும் இல்லை என அறிவித்துள்ளது.
பால் விலை
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவி வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக அன்றாட தேவைகளில் ஒன்றான பாலின் விலை கூடியுள்ளது. தீவனத்தின் விலை உயர்வு, பருவமழை, பணவீக்கம் ஆகியவை இந்த பாலின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து அமுல் நிறுவனத்தின் கீழ் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) பாலை விற்பனை செய்து வருகிறது. GCMMF கூட்டமைப்பு குஜராத், டெல்லி-NCR, மேற்கு வங்காளம் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் பால் விற்பனை செய்கிறது. இந்த நிலையில் அமுல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போன்று பாலின் விலையை உயர்த்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கு இந்நிறுவன தலைவர் கூறியிருப்பதாவது, கடந்த அக்டோபரில் அமுல் லிட்டருக்கு ரூ.61ல் இருந்து ரூ.63 ஆக உயர்த்தப்பட்டது. இதே போல் எருமை பால் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து ரூ.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் பாலின் விலையை உயர்த்த திட்டமில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.