தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து வசதி – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து வசதி - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து வசதி - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து வசதி – அரசு அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 150 சிறப்பு பேருந்துகளை திருப்பதிக்கு இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

போக்குவரத்துத்துறை ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு திருப்பதியில் பிரமோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த கோவிலுக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல ஏதுவாக 150 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் செப்.8 ‘இந்த’ மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!

திருப்பதி பிரமோற்சவ விழாவின் தொடக்க நாளான செப்டம்பர் 27ம் தேதி மாலை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில், அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினம் புரட்டாசி 3வது சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசின் சார்பாக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருமலைக்கு 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து காளஹஸ்தி வழியாக 55 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக 20 பேருந்துகள் மற்றும் வேலூர் சித்தூர் வழியாக திருப்பதிக்கு 65 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதையடுத்து கன்னியாகுமரி முதல் திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பேருந்துகளை திருப்பதிக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி, குப்பம் வழியாக 15 பேருந்துகள், கள்ளக்குறிச்சியில் இருந்து 8 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!