தமிழகத்தில் செப்.8 ‘இந்த’ மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்தியாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற 8 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஓணம் பண்டிகை:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரசித்தி பெற்ற பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் இந்த ஆண்டிற்கான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. அதாவது, ஆண்டுதோறும் இந்த அறுவடை திருவிழாவானது கேரள மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.
Iphone பயனர்களுக்கான ஷாக் ரிப்போர்ட் – இனி WhatsApp செயல்பாடு ரத்து!
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்தவொரு விழாக்களும், பண்டிகைகளும் விமர்சையாக கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் மக்கள் அதிகம் கூடி பண்டிகைகள் கொண்ட கூடாது என அரசு உத்தரவிட்டிருந்தது. தற்போது தொற்று குறைய தொடங்கியுள்ளதால் மக்கள் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.
Exams Daily Mobile App Download
ஓணம் பண்டிகை கேரள மக்கள் மட்டுமின்றி மலையாள மொழி பேசும் தென் தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடும் பாரம்பரிய பண்டிகையாக உள்ளது. இதன் காரணமாக ஓணம் பண்டிகை தினத்தை முன்னிட்டு 08.09.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் மாதம் 2வது சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்