சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – ரயில்வே புதிய ஏற்பாடு!
சென்னை புறநகர் பகுதிக்கு செல்ல விரும்புவோர் எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே தென்னக ரயில்வே டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் படியான ஏற்பாடு அமலுக்கு வரவுள்ளது.
சென்னை மெட்ரோ:
மக்களின் பொதுப் போக்குவரத்து தேவைகளுக்காக தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டம் 2008 – 2009 நிதியாண்டில் இருந்து தொடங்கப்பட்டது. மக்களின் தேவைக்கேற்ப மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தற்போது ஓரளவுக்கு கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் பழையபடி போக்குவரத்து சேவைகள் அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது.
பயணிகள் எந்த இடத்தில் இருந்து வேண்டுமென்றாலும் சென்று வர வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுவதால் பேருந்துகளை விட மக்கள் அதிகமாக மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சென்னையில் உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல விரும்பும் பயணிகள் எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களிலேயே தங்களது தென்னக ரயில்வே டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் படியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஐடி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று வரும் பயணிகளுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்தந்த தனியார் மற்றும் ஐடி நிறுவனங்கள் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலின் தேவை மக்களுக்கு அதிகமாக இருப்பதால் அவ்வப்போது புதிய மெட்ரோ ரயில்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது.