தமிழகத்தில் ஜூன் 27 முதல் ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் சேவை:
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் கொரோனா அச்சம் காரணமாக பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொதுமுடக்கம் காலத்தில் மக்கள் நலன் கருதி ரயில் சேவைக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊரடங்கு காலத்தில் சில வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் சில ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் – ஹோட்டல்கள் திறக்க அனுமதி!
மேலும் சில வழித்தடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு தெற்கு ரயில்வே ஓர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 27 முதல் ஜூலை 7ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக சில வழித்தடங்களில் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது மாற்றம் செய்யப்படும் ரயில்கள் விவரம் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி வாணியம்பாடி-கேதண்டபட்டி இடையே ஜூன் 27 முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில் ரயில்வே பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 10 நாட்களுக்கு (வெள்ளிக்கிழமை தவிர) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.