ஜூன் 28 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் – ஹோட்டல்கள் திறக்க அனுமதி!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் வீதம் குறைந்து வருவதை தொடர்ந்து ஜூன் 28 ஆம் தேதி முதல் மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்படவுள்ளது. அதன் படி திருமண அரங்குகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருவதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் அதிகமான கொரோனா நோயாளிகளை குணப்படுத்தியுள்ள மாவட்டங்களில் மட்டும் ஜூன் 28 ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி திருமண அரங்குகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
ஆனால் திருமண அரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 40 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசின் சுற்றறிக்கையில், திருமணங்களை ஏற்பாடு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி, ஒரு திருமண நிகழ்வுக்கு 40 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பாஸ் உள்ளவர்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக கர்நாடகா அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது, பேருந்துகள் இயக்கத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கர்நாடகாவில் நேற்று (ஜூன் 25) ஒரு நாளில் 3,310 புதிய பாதிப்புகள் மற்றும் 114 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் அம்மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு இதுவரை 26,84,997 பேர் குணமடைந்துள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,07,195 பேர் சிகிச்சையில் உள்ளனர்.