விஜய் டிவி ‘Mr & Mrs சின்னத்திரை’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய ஜோடி – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான Mr & Mrs சின்னத்திரையில் கலந்து கொண்ட மணி மற்றும் சோபியா தம்பதியினர், சொந்த காரணங்களால் இந்த போட்டியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
Mr & Mrs சின்னத்திரை:
விஜய் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்படுகின்றன. மக்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மாறுபட்ட விதத்தில் புதுப்புது போட்டிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அதில் ஒன்றான Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கோபி மற்றும் தேவதர்ஷினி நடுவர்களாக உள்ளனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியை மகாபா ஆனந்த் மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கினர்.
பார்வதியை பெண் கேட்டு வரும் பாஸ்கர் குடும்பத்தினர் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
ஆனால் அதன் பின்னர் அர்ச்சனாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதால், அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்கி வருகிறார். இதில் மைனா நந்தினி, அவரது கணவர் யோகேஷ், தீபா அவரது கணவர், காயத்ரி அவரது கணவர் யோகி ஆகிய முன்னணி கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒரு ஜோடியான மணி சோபியாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு, மணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் ஆவார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த இவர்கள் திடீரென சொந்த காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். எதனால் வெளியேறினார்கள் என்பது சரியாக தெரியவில்லை.
TN Job “FB Group” Join Now
மூன்று சீசன்களாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது வரை சுவாரசியம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட வினோத் சிந்து ஜோடி இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றனர். முதல் சீசனில் சங்கரபாண்டியன் ஜெயபாரதி ஜோடி வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.