மதுரையில் மெட்ரோ பணிகளுக்காக 75 இடங்களில் மண் பரிசோதனை – வெளியான முக்கிய தகவல்!
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட இருக்கும் நிலையில் அதற்காக 75 இடங்களில் மண் தர பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மண் பரிசோதனை
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய நகரமாக மதுரை இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் சென்னை போல மெட்ரோ ரயில் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் அதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
மேலும் 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரிக்கப்பட இருக்கிறது. மேலும் கடந்த மாதம் திருமங்கலம் – ஒத்தக்கடை வழித்தடத்தில் எந்தெந்த பகுதியில் அதிக போக்குவரத்து இருக்கிறது என ஆய்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் அமைப்பதால் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கட்ட வேண்டிய பாலங்களின் எண்ணிக்கை, சுரங்கப்பாதை அமைவிடம், தற்போதைய கட்டுமான விபரம், மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்க பூமிக்கு அடியில் கான்கிரீட் தூண் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக 75 இடங்களில் மண் தர பரிசோதனை நடந்து வருகிறது.
அதனை தொடர்ந்து திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை உத்தேச வழித்தடத்தில், 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் ஆழ்துளையிட்டு மண் மாதிரியும் 75க்கும் மேற்பட்ட இடங்களில் துளையிட்டு மண் தர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 50 இடங்களில் மண் ஆய்வுப்பணிகள் முடிந்து இருப்பதாகவும், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, ஒத்தக்கடை பகுதியில் சுமார் 13 முதல் 15 மீட்டரில் கடினமான பாறை இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download