தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், மகளிர் விடுதிகள் – சமூக நலத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லங்கள், மகளிர் விடுதிகள் போன்றவை நடத்துபவர்கள் உரிய விதிகளின்படி பதிவு செய்து அதற்கான உரிமம் பெற வேண்டும் என்று சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
சமூக நலத்துறை:
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கட்டண/கட்டணமில்லா முதியோர் இல்லம், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து முதியோர் இல்லம், முதியோர் குத்தகை விடுதிகள் மற்றும் வடக்கை விடுதிகள் ஆகியவை 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளில் விதி பிரிவு 12(3) இந்த கீழ் 31.07.2021க்குள் பதிவு செய்வ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக கல்விக்கடன் பெறுவது எவ்வாறு? முழு விவரங்கள்!
மேலும் அரசாணை எண்.83, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 2.11.2016 ல் வெளியிட்ட நெறிமுறைகள் படி இந்த விடுதிகளை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் சட்டத்தின் பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகியவற்றின் படி விடுதிகள் நடத்துபவர்கள் 31.07.2021க்குள் உரிமம் பெற்று பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அரசாணை எண்.31 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 26.06.2014 மாற்று அரசாணை எண்.12 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை நாள் 21.02.2015 ஆகியவற்றில் வெளியிட்டுள்ள நெறிமுறைகளின்படி இவ்விடுதிகளை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பதிவில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை மீறுபவர்கள் மீது சட்டபூர்வமான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் இது தோ தொடர்பாக மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக நல அலுவலகத்தை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.