தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் – ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் - ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் - ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் – ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்!

தமிழகத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காலை சிற்றுண்டி திட்டம்:

தமிழகத்தில் பசியால் வாடும் மாணவர்களின் பசியை போக்கி கல்வி கற்பிக்கும் வண்ணம் அரசு பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டம் தமிழகம் மட்டுமில்லாது இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது . இதனால் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் கல்வி இடைநிற்றலும் குறைந்தது. தற்போது தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மாநகராட்சிகளில் 381 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,14,095 மாணவ, மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் சென்னையை பொறுத்தவரை 36 பள்ளிகளில் 5,941 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் அம்மா உணவகம் மூலம் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம் – குடியரசு தலைவர் ஒப்புதல்

Exams Daily Mobile App Download

மேலும் ஒவ்வொரு நாளும் காலை வழங்கப்படும் உணவு குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் திங்கள் கிழமை காலை உப்புமா வகைகள், செவ்வாய் கிழமை கிச்சடி வகைகள் புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை கிச்சடி உடன் இனிப்பு வகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!