தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம் – குடியரசு தலைவர் ஒப்புதல்!

0
தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம் - குடியரசு தலைவர் ஒப்புதல்!
தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம் - குடியரசு தலைவர் ஒப்புதல்!
தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம் – குடியரசு தலைவர் ஒப்புதல்!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலியான ஆவணங்களை பதிவு செய்து பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. மேலும் இது தொடர்பான வழக்குகள் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

பத்திரப்பதிவு:

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் அவ்வப்போது பல்வேறு இடங்களில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்கின்றனர். மேலும் சார்பதிவாளர்களும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருக்கின்றனர். இதனால் இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கு தீர்ப்பு வழங்க அதிக மாதங்கள் எடுத்துக் கொள்வதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பு வழங்க கால தாமதம் ஆகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சார்பதிவாளர் அலுவலகங்களில் போலியான ஆவண பதிவு செய்யும் போது சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் இதற்காக உரிய விசாரணையை நடத்தி தீர்வு மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மத்திய அரசின் பல்வேறு துறைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியினை பயன்படுத்தும் விதிமுறைகள் – அரசின் அறிவுறுத்தல்

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி குடியரசு தலைவர் விரைவில் ஒப்புதலுக்கு கையொப்பமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா சட்டமானால் போலி ஆவணங்களை கொண்டு பத்திரப்பதிவு செய்வது குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா ஒன்றிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!