50 வயதில் 10 கோடி ரூபாய் இருப்பு – SIP சிறந்த முதலீடு திட்டங்கள்!
நமது இளவயதிலேயே நாம் ஓய்வு பெறும் வயதினை திட்டமிட்டு அதற்கான சிறந்த முதலீடு முறைகளை தேர்வு செய்வதை பற்றி இந்த பதிவில் காப்போம்.
ஓய்வூதிய முதலீடு:
இந்தியாவில் பொதுவாக ஓய்வு பெறும் வயது 60 ஆகும். ஓய்வு காலத்தில் நாம் மகிழ்ச்சியாக எந்த வித சிரமமும் இல்லாமல் பொழுதை கழிக்க வேண்டுமென்றால் நமது இளவயதில் கடினமாக உழைத்து, சிறந்த முறையில் நமது பணத்தை முதலீடு செய்து வைக்க வேண்டும். நமது ஓய்வு காலத்தை முன்னதாகவே அடைய விரும்பினால் அதற்கு போதுமான அளவு திட்டமிடல் வேண்டும்.
ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நமது 25 வயது முதல் சேமிக்க தொடங்கினால் விரைவில் ஓய்வு காலத்தை தேர்வு செய்து கொள்ளலாம். நமது பணத்தை முதலீடு செய்வதற்கு எஸ்ஐபி நல்ல சேமிப்பு திட்டமாகும். Systematic Investment Plan என்பது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து முதலீடு செய்யும் முறை ஆகும். இந்த முறையில் குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் மாதந்தோறும் அல்லது காலாண்டு என குறிப்பிட்ட காலக்கெடுவில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். பங்குச்சந்தை முதலீடுகளில் அபாயம் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த முறையில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பங்கேற்கலாம்.
TN Job “FB Group” Join Now
இந்த முறையில் எப்போது வேண்டுமானாலும் நமது முதலீட்டை அதிகரித்து கொள்ளலாம். 50 வயதிற்குள் ரூ.10 கோடி சேமிப்பை உருவாக்க விரும்பினால் முன்பே திட்டமிட வேண்டும். ஆண்டுக்கு 12 முதல் 15 விழுக்காடு வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டு தொகையை 10% அதிகரிக்க வேண்டும். எஸ்ஐபி கால்குலேட்டரின் மூலம் கணக்கிட்டுப் பார்த்தால் 50 வயதில் 10 கோடி ரூபாய் சேமிப்பை உருவாக்க வேண்டுமெனில் 25 வயதில் முதல் மாதம் ரூ.26000 முதலீடு செய்ய வேண்டும்.
All r very useful in exams daily