ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடைய பெண்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இலவச தையல் இயந்திரம்:
தமிழகத்தில் சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுய தொழில் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள உதவும் வகையில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க டிப்ஸ் – தவறாமல் படிங்க!
இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை ஆதரவற்ற பெண்களாகவோ, விதவைகளாகவோ, மாற்றுத்திறனாளி பெண்களாகவோ இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் 20 முதல் 40 வயதுடையோர் வரை இத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் பெண்கள் பதிவு செய்யப்பட்ட தையல் பயிற்சி நிறுவனத்தில் 6 மாத காலம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
மேற்கண்ட தகுதிகள் உள்ள பெண்கள் அதற்கான உரிய சான்றிதழ் மற்றும் வயதுச்சான்று , சாதிச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் வரும் 30ம் தேதிக்குள் கடலூர் மாவட்ட பெண்கள் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள சேவை இல்ல வளாகத்தில் சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.