மனம் வெறுத்து பேசிய சூப்பர் சிங்கர் சிவாங்கி – என்ன நடந்தது? ரசிகர்கள் ஷாக்!
சூப்பர் சிங்கர் சிவாங்கி தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார். இதன் விரிவான விளக்கம் கீழே உள்ளது.
சிவாங்கி பதில்:
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் 8 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர்தான் சிவாங்கி கிருஷ்ணகுமார். சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகம் ஆகி குக் வித் கோமாளி சீசன் 2 என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக வளம் வந்தார். அவரின் குழந்தை தனமான பேச்சு தான் ரசிகர்களுக்கு , இவரை அதிகம் விரும்புவதன் காரணமாக இருந்தது. குக் வித் கோமாளி ஷோவில், அஸ்வின் சிவாங்கி காம்போ தான் மக்களிடையே அதிகம் பிரபலம் அடைந்தது.
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமிக்ரான் – 45 பேருக்கு தொற்று உறுதி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
இந்நிகழ்ச்சியில் “அஸ்வினு” என்று சிவாங்கி சொல்வது மிகவும் சூப்பராக இருக்கும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சிவாங்கி சில ஆல்பம் சாங்களில் பாடி உள்ளார். வெள்ளித்திரையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் DON படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்து வருகிறார். இந்த வகையில் காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த வருடம் சிவாங்கிக்கு சிறப்பான வருடமாக உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
இந்த 2021 வருடம் இன்னும் சில நாட்களில் முடியப் போகிற நிலையில் இன்ஸ்டாகிராமில் சிவாங்கிடம் அவரது ரசிகர் கேள்வி ஒன்று கேட்டுள்ளார். இந்த வருடத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடம் என்னவென்று அதற்கு “கண்மூடி தனமா யாரையும் நம்ப கூடாது ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்” என்று சிவாங்கி சொல்லியிருக்கிறார். இதைத்தான் இந்த வருடத்தில் நான் கற்றுகொண்டேன் என்று கூறியுள்ளார்.
அன்னபூரணி அம்மாவை வெளுத்து வாங்கிய ‘சொல்வதெல்லாம் உண்மை’ லட்சுமி ராமகிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ!
அடுத்த வருடம் தன்னுடைய AIM வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது தான் என்று சிவாங்கி பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு மிகவும் முக்கியம் அவர் குடும்பம் தானாம், குக் வித் கோமாளி சீசன் 3 யில் சிவாங்கி யும் கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகையில் பார்ப்பதற்கு குழந்தை தனமாக சிவாங்கியாக இருந்தாலும் மிகவும் MATURE ஆக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்