தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமிக்ரான் – 45 பேருக்கு தொற்று உறுதி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

0
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமிக்ரான் - 45 பேருக்கு தொற்று உறுதி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமிக்ரான் - 45 பேருக்கு தொற்று உறுதி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமிக்ரான் – 45 பேருக்கு தொற்று உறுதி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் ஓமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது தொடர்பான மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓமைக்ரான் பரவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த ஓமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. ஓமைக்ரான் தொற்று ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது அநேக மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிச.31ம் தேதிக்கு பிறகு இரவு ஊரடங்கு அமல்? தீவிர ஆலோசனை! அரசின் முடிவு என்ன?

இந்தியாவில் கேரளா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடக மற்றும் தமிழ்நாட்டிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்தவருக்கு முதன்முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அத்துடன் அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு ஓமைக்ரான் இருக்கலாம் என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கொரோனா தடுப்பூசி பணிகளையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

IND vs SA முதல் டெஸ்ட்: ஷமியின் சிறப்பான பந்து வீச்சு – தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்!

நேற்று வரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34-ஆக இருந்தது. இன்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொற்று பாதித்த 6 பேர் சென்னை கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 7 பேர் சென்னை, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் , தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!