‘ராஜா ராணி 2’ சித்து, ஷ்ரேயாவின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை – அவரே வெளியிட்ட வீடியோ!
திருமணம் சீரியல் மூலமாக காதலிக்க தொடங்கிய சித்து மற்றும் ஷ்ரேயா தமபதியினரின் திருமணம் சில நாட்களுக்கு முன்னர் முடிந்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் மெஹந்தி நிகழ்ச்சியில் நடந்தது பற்றி பேசியுள்ள வீடியோ வெளிவந்துள்ளது.
சித்து – ஸ்ரேயா கலாட்டா:
நவம்பர் மாதத்தில் பிரபலமாக உள்ள பல சின்னத்திரை ஜோடிகளின் திருமணம் நடந்துள்ளது. இதனால் சமூக வலைத்தளம் முழுவதும் ஒரே விழாக்கோலமாக உள்ளது. எங்கு திரும்பினாலும் திருமண ஜோடிகளின் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளது. முதலில் ஷபானா- ஆர்யன் ஜோடியின் திருமணம், அடுத்ததாக ரேஷ்மா – மதன் திருமணம் என்று நடந்தது. ரேஷ்மா திருமணத்திற்கு சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் வந்திருந்தனர். அடுத்து உங்களுக்கு எப்போ கல்யாணம் என்று கேட்டதற்கு விரைவில், என்று பதில் அளித்தனர்.
குழந்தையை ஏலம் விட்ட விஜய் டிவி “குக் வித் கோமாளி” கனி – வைரலாகும் வீடியோ!
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அடுத்த சில நாட்களிலேயே சித்து மற்றும் ஸ்ரேயா இருவரின் திருமணம் தொடர்பான செய்திகள் வரத் தொடங்கியது. நவம்பர் 21ம் தேதி சித்து மற்றும் ஸ்ரேயா ஜோடியின் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழ் சீரியலில் திருமணம் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பின்னர், காதலிக்க தொடங்கியவர்கள். இவர்களின் காதல் திருமணத்திலேயே முடியும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். சித்து தற்போது விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இதனால் பல விஜய் டிவி நரட்சத்திரங்கள் மற்றும் மற்ற சின்னத்திரை பிரபலங்களும் இவர்களின் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகி ‘டாக்டர்’ நடிகையுடன் இணைந்த ரோஷினி – வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு, சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் ஒரு தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், இவர்களின் திருமணத்திற்கு முந்தைய நாளின் மெஹந்தி விழாவில், ஷ்ரேயா பாவாடை தாவணி அணிந்திருந்தார். அதில், அவரை பார்த்து சித்து ரசித்து கொண்டிருந்ததாக கூறியுள்ளார். இது போல் கலகலப்பாக அவர்கள் பேசியுள்ளனர். இதனால் இந்த வீடியோ ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.