தமிழகத்தில் மீண்டும் கடைகள் அடைப்பு? வணிகர் சங்க தலைவா் அறிவிப்பு!
தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படா விட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகா் சங்க தலைவா் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
விலை குறைப்பு:
தமிழகத்தில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு தளர்வில் அனைத்து வகையான கடைகளும் செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையானது நாள்தோறும் ஏற்றம் கண்டு வருகிறது. மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகா் சங்க தலைவா் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியமா? கொரோனா 3வது அலை எதிரொலி!
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழக அரசின் அறிவிப்பின் படி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். இது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்ட வணிக சங்க ஊழியர்கள், அரசுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து உறுதிமொழி எடுக்க உள்ளனர். இது தவிர தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் லாரி வழியாக கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து லாரி உரிமையாளா்கள் சங்கத்தினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புகையிலை பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வரும் 5 நபர்களை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம். மேலும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சி மன்ற கூட்டத்தில் தெரிவிக்க உள்ளோம். அதிகரித்து வரும் எரிபொருள்கள் விலை குறைக்கபடா விட்டால் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என அவர் தெரிவித்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.