இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியமா? கொரோனா 3வது அலை எதிரொலி!

0
இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியமா? கொரோனா 3வது அலை எதிரொலி!
இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியமா? கொரோனா 3வது அலை எதிரொலி!
இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியமா? கொரோனா 3வது அலை எதிரொலி!

இந்தியாவில் தற்பொழுது தான் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரும் சூழலில், 3 ஆம் அலையின் பாதிப்பு துவங்கியுள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். எனினும் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு தேவைப்படுமா? என்ற விளக்கம் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம்:

கடந்த மார்ச் மாதத்தில் பேரலையாக உருவெடுத்த கொரோனா வைரஸ் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியது. இந்த வைரஸின் பாதிப்பை உணர்ந்து கொள்வதற்கு முன்னரே இது பல மாநிலங்களில் பரவியிருந்தது. இந்நிலையில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் விதிக்கப்பட்டது. இந்த புதிய வைரஸின் பாதிப்பு என்னவென்று சரியாக விளங்கிக்கொள்ள கூட முடியாத சூழலில் மக்கள் வீடுகளில் முடங்கி விட, ஒவ்வொரு குடும்பத்திலும் நிதி நெருக்கடியும், அரசுக்கும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு – இன்று முதல் அமல்!

பலர் இந்த உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட, பலர் மரணித்தும் போனார்கள். இருப்பினும் இந்த கடுமையான சூழலை போராடி வெற்றி கண்ட இந்தியாவில் மீண்டுமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளும் கை கொடுத்து இந்தியாவை மீண்டு வர செய்தது. இந்நிலையில் கொரோனா 3 ஆம் அலைக்கான தாக்கம் தற்பொழுது துவங்கி இருப்பதாகவும், அது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் உச்சமடையும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதேநாம் தெரிவித்துள்ளார்.

இந்த 3 ஆம் அலை பாதிப்பு 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடும் என்பதால், பலரும் அச்சத்தில் உள்ளனர். இந்த அலையை எதிர்கொள்ள இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிகள் தான் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இவ்வகை தடுப்பூசிகளை முதல் டோஸ் செலுத்தும் போது 30%மும், 2 ஆவது டோஸில் 90% மும் எதிர்ப்புசக்தி கிடைப்பதாக கூறப்படுகிறது. தவிர மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை முற்றிலுமாக தளர்த்துவது பாதுகாப்பானது அல்ல என்றும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

எனினும் இந்தியாவில் முடங்கியுள்ள பொருளாதார நடவடிக்கைளை மீண்டும் துவங்குவது அவசியம் என்பதால், பொது மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் கொரோனா 2 ஆம் அலை தாக்கத்தை போல, அதன் 3 ஆம் அலை பாதிப்பு அதிகம் இருக்காது என கூறப்படுகிறது. என்றாலும் 3 ஆம் அலையை எதிர்கொள்ளும் போது தான் அதன் வீரியம் இன்னதென்று தெரிய வரும். அதற்குள் தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!