5 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை – சுற்றறிக்கை!
கேரளாவில் 5 குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் பெற்ற கத்தோலிக்க பிரிவு தம்பதியினருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை:
கேரளாவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது 14 சதவீதமாக குறைந்துள்ளதாக கத்தோலிக்க அமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் கத்தோலிக்கர் எண்ணிக்கை 18.38 சதவீதத்திலிருந்து வெகுவாக குறைந்துள்ளது. இதனை அதிகரிக்கும் நோக்கிலும், கத்தோலிக்க மக்களுக்கு உதவும் வகையிலும் கத்தோலிக்க அமைப்பு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கடைகள் அடைப்பு? வணிகர் சங்க தலைவா் அறிவிப்பு!
மத்திய கேரளாவில் உள்ள சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் சார்பில் குடும்ப ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து அனைத்து பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கேரளாவில் 5 குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் பெற்ற கத்தோலிக்க பிரிவு தம்பதியினருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
கத்தோலிக்க மக்களின் குழந்தைகளுக்கு நலனுக்கு தேவையான வசதிகளை கத்தோலிக்க இயக்கம் செய்யும் என குடும்ப நல இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் குறைந்து வரும் கத்தோலிக்க மக்களை அதிகப்படுத்தும் முயற்சியாகவும், கத்தோலிக்க தம்பதியினர் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கவும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என ஆயர் ஜோசப் கல்லரங்காட் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கத்தோலிக்க தம்பதியின் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இலவச கல்வியும், சிகிச்சையும் அளிக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.