கடைகள் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி – யூனியன் அரசு உத்தரவு!!
சண்டிகரில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கில் மேலும் ஒரு மணி நேரத்தை குறைத்து இரவு 8 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு குறைப்பு:
சண்டிகரில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. ஜூன் 21ம் தேதி நிலவரப்படி, அங்கு மொத்தம் 61,444 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60,327 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மேலும், 806 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் முன்னதாகவே அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் பல தளர்வுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு? அமைச்சர் விளக்கம்!
தற்போது அங்கு அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கில் மேலும் ஒரு மணி நேரம் தளர்த்துவதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடைகளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளித்துள்ளது. கடை உரிமையாளர்கள் கோவிட் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தளர்வுகள்:
- கடைகள் இரவு 8 மணி வரை திறக்கலாம்.
- இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
- காலை 10 மணி முதல் இரவு 10.30 மணி வரை உணவகங்கள் மற்றும் பார்கள் 50 சதவீத கொள்ளளவுடன் செயல்பட முடியும்.
TN Job “FB Group” Join Now
- திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற கூட்டங்கள் 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
- விளையாட்டு வளாகங்கள் முறையான கோவிட் நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்படும்.
- சுக்னா ஏரியில் 50% பயணிகளுடன் படகு சவாரி அனுமதிக்கப்படும்.