தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்குவது சாத்தியமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இழப்பீடு தொகை :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை விரைவாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அரசு தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. இரண்டாம் அலை கொரோனா உருமாறிய கொரோனா வைரஸ் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது அதிக வீரியத்துடன் பரவி பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அதிகப்படுத்தி வருகிறது. இந்த வருடம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

தமிழக தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் – கல்வித்துறை எச்சரிக்கை!

அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்ட போதும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை. வயதானர்களும், இணை நோய்கள் உள்ளவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இரண்டாம் அலை நடுத்தர வயதினரையும் விட்டு வைக்கவில்லை அதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து பாதுகாக்க ஆளின்றி சிரமப்படுகின்றன. பெற்றோர்கள் இல்லாமல் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் , கொரோனாவால் தங்கள் குடும்ப உறுப்பினரை இழந்தவர்களுக்கும் அரசு நிவாரண நிதிகளை அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களும் இழப்பீடு வழங்குவது என்பது சாத்தியமில்லை மேலும் கொரோனாவால் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் 5000 தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறவில்லை எனவும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார் அதனை செயல்படுத்தியும் வருகிறார். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு அறிவித்த பிறகே மத்திய அரசு இத்திட்டத்தை அறிவித்தது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!