மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக் – சம்பளம் வர தாமதம்! வேலைநிறுத்தப் போராட்டம்!
கேரளாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் வழங்க தாமாவதை கண்டித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலை நிறுத்தம்:
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கடைகள், அலுவலகங்கள், திரையரங்கு போன்றவைகள் மூடப்பட்டது. அதே போல பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அரசு நோய் தடுப்பு பணிகளால் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதமாவதை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதியம் வழங்கும் தேதியில் எந்த உத்தரவாதமும் வழங்க அரசு தவறியதாக தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தை குற்றம் சாட்டினர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர். ஊதிய தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியுவைத் தவிர மற்ற அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் கேஎஸ்ஆர்டிசியில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எதிர்கட்சியினரின் தொழில் சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாதம் 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கலாம் எனவும், அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்தும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.