தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் – ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? சட்டப்பேரவையில் அறிவிப்பு?
தமிழக அரசுத்துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டுமாக 58 ஆக குறைப்பது குறித்து அரசு சிந்தித்து வரும் வேளையில் இது தொடர்பான அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஓய்வு வயது
தமிழகத்தில் கொரோனா பேரலை தொற்று தாக்கத்தால் நிதி பற்றாக்குறையை சந்தித்த அதிமுக தலைமையிலான அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டிருந்தது. அதாவது அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணப்பலன் உள்ளிட்ட சலுகைகளை அளிக்க அரசுக்கு போதிய நிதி இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த செயல்முறைகள் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
கண்ணம்மாவுடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய பாரதி, மீண்டும் இணைந்த ஜோடி – ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு, ஊழியர்கள் ஓய்வு வயதை மீண்டுமாக 58 ஆக குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. ஏனென்றால் ஓய்வு வயது 60 என நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசுத் துறையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அளிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. அதனால் இந்த ஓய்வு வயதை குறைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 2022ம் ஆண்டு ஜன.5ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
டிச.25 மற்றும் ஜன.1ம் தேதியன்று இரவு ஊரடங்கு தளர்வுகள் – அரசு அறிவிப்பு!
இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனுடன் அரசுத்துறையில் 33 வருடங்கள் பணி புரிந்தவர்கள் 58 வயதில் ஓய்வு பெறலாம் என்றும் மற்றவர்கள் 60 வயது வரை பணியை தொடரவும் அனுமதி அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் 58 வயதில் ஓய்வு வயது அறிவிப்பு வெளியானால் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற நேரிடும். இவர்களுக்கான பணப்பலன்கள் பாண்ட் பத்திரம் மூலம் வழங்கபடலாம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்