கண்ணம்மாவுடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய பாரதி, மீண்டும் இணைந்த ஜோடி – ரசிகர்கள் உற்சாகம்!

0
கண்ணம்மாவுடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய பாரதி, மீண்டும் இணைந்த ஜோடி - ரசிகர்கள் உற்சாகம்!
கண்ணம்மாவுடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய பாரதி, மீண்டும் இணைந்த ஜோடி - ரசிகர்கள் உற்சாகம்!
கண்ணம்மாவுடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய பாரதி, மீண்டும் இணைந்த ஜோடி – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியின் முக்கிய தொடராக உள்ள பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது வெண்பாவின் ரீஎன்ட்ரி, காமெடி ஆர்ட்டிஸ்ட் அறந்தாங்கி நிஷாவின் புது வரவு ஆகியவற்றால் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றாக இணைந்து எடுத்துள்ள செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

தனது கல்லூரி நண்பன் பாரதியை காதலிக்கும் வெண்பா, பாரதியை தான் திருமணம் செய்து கொள்வதற்காக அவரை சுற்றி ஒரு சதிவலையை பின்னுகிறார். வெண்பாவை உண்மையான தோழியாக நினைக்கும் பாரதி, அவர் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிறார். தன காதல் மனைவி கண்ணம்மா மீது வெண்பாவின் பேச்சை கேட்டு சந்தேகப்படுகிறார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மா பாரதியை விட்டு பிரிகிறார். கிட்டத்தட்ட 9 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த இடைப்பட்ட காலங்களில் பாரதியும், வெண்பாவும் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் அது தட்டி போய் விடும்.

டிச.25 மற்றும் ஜன.1ம் தேதியன்று இரவு ஊரடங்கு தளர்வுகள் – அரசு அறிவிப்பு!

இந்நிலையில் வெண்பாவை கண்ணம்மா திட்டம் போட்டு சிறைக்கு அனுப்பியதை அறிந்த பாரதி, கண்ணம்மாவிடம் இருந்து எப்படியாவது விவாகரத்து பெற்று விட துடிக்கிறார். ஆனால் கண்டிப்பாக இவர்கள் இருவரும் 6 மாதங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இந்த சமயத்தில் தான் புது கண்ணம்மாவான வினுஷாவை சீரியலில் அறிமுகம் செய்தார்கள். முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் அவர் ஒட்டாமல் தெரிந்தாலும், தற்போது மிகவும் கதாபாத்திரத்தோடு ஒன்றி, மக்கள் மனதில் கண்ணம்மாவாக பதிய தொடங்கியிருக்கிறார். பாரதியும், கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கிய பிறகு வரும் எபிசோடுகள் அனைத்தும் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய ராதிகா, உதவிக்கு கோபியை அழைத்த மயூரா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இவர்கள் சிறு குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது புதிதாக அறந்தாங்கி நிஷா இவர்களின் கீழ் வீட்டிற்கு புதிதாக குடி வந்திருக்கும் வக்கீலாக வருகிறார். இவர் கண்ணம்மாவோடு பாரதியை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதனால் வரும் எபிசோடுகள் மேலும் கலகலப்பாக வரும். கண்ணம்மாவும் பாரதியும் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடி மீண்டும் இணைந்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!