ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு – நவம்பர் 30க்கு பின் நீட்டிப்பு கிடையாது!
மத்திய உணவுத்துறை செயலாளர் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான கூடுதல் இலவச உணவு தானியங்கள் விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய உணவுத்துறை அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக மாநில அரசுகள் தங்கள் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது. நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு மே மற்றும் ஜூன் மாதத்திற்கு ரேஷன் கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10.63 லட்சம் பேருக்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு – தணிக்கை செய்து பெயர் நீக்க உத்தரவு!
அதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை முன்னுரிமையற்ற கார்டுதாரர்களில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதல் அரசி இலவசமாக வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த திட்டம் ஏப்ரல்-ஜூன் 2020 காலத்திற்கு தொடங்கப்பட்டது, ஆனால் பின்னர் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. PMGKAY இன் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் இதுவரை 80 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் இலவச ரேஷன் பொருட்களை பெற்றுள்ளனர்.
SSC சுருக்கெழுத்தர் தேர்வு நவ.11 முதல் துவக்கம் – தேர்வு மையங்கள் & நுழைவுச் சீட்டு விவரங்கள் இதோ!
ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் மானிய விலையில் கிடைக்கும் தானியங்களுக்கு மேல் கூடுதலாக இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. தற்போது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதாக மத்திய உணவுத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே நேற்று அறிவித்துள்ளார்.