தமிழகத்தில் 10.63 லட்சம் பேருக்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு – தணிக்கை செய்து பெயர் நீக்க உத்தரவு!
தமிழகத்தில் இறந்து போனவர்க்ளின் பெயர்களை ரேஷன் கடை தணிக்கை அறிக்கையில் இருந்து நீக்கம் செய்யாமல் இதுவரை 10.63 லட்சம் பேருக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது அரசால் கண்டறியப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்கள் சிலருக்கு முறையே வழங்கப்படுவதில்லை என்று அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இது குறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்பட்டு வரும் நியாயவிலை பொருட்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இறந்துபோன 10.63 லட்சம் பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
Airtel vs Jio vs BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் பிராட்பேண்ட் திட்டங்கள்!
இந்த தகவலானது தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் இருந்து பெறப்பட்ட கடிதம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் இறந்தவர்கள் மற்றும் புள்ளி விவரங்கள் பெறப்பட்டுள்ளன. பின்பு அந்த விபரங்களை பொதுவிநியோக திட்டத்தின் ரேஷன் அட்டை தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்வாறு இறந்து போன 10.63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் செய்யாமல் பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் கூட இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டை தரவுகளில் இடம் பெற்றுள்ளன.
SSC சுருக்கெழுத்தர் தேர்வு நவ.11 முதல் துவக்கம் – தேர்வு மையங்கள் & நுழைவுச் சீட்டு விவரங்கள் இதோ!
இவ்வாறு கண்டறியப்பட்ட விபரங்களை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் ஆணையர் சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அந்த சுற்றறிக்கையில் இவ்வாறு பெறப்பட்ட விபரங்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து இறந்தவர்களின் பெயரை நீக்கம் செய்வது குறித்த சிறப்பு குறிப்புடன் பரிந்துரை அறிக்கையை ஒரு வாரத்துக்குள் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் துணை ஆணையர் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.