‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ சீசன் 5ல் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படும் நபர் யார் என்கிற விவரங்கள் தற்சமயம் வெளியாகி உள்ளது. இதில் போட்டியாளர் சுருதி வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் எலிமினேஷன்
சுமார் 30 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு எலிமினேஷன் நடைபெற இருக்கிறது. இந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட 18 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் துவங்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு பிக்பாஸ் சீசன்களுக்கும் இருக்கும் வழக்கமான எதிர்பார்ப்பு இந்த சீசனுக்கும் இருந்தது. இப்படி ஆட்டம், பாட்டம், சண்டை, சச்சரவு என நகர்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுகிறாரா பரீனா? அடுத்தகட்ட கதைக்களம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இதுவரை ஃபன் மற்றும் என்டர்டைன்மென்ட் என கடந்து வந்த பிக்பாஸ் வீடு இனி வரும் நாட்களில் கடுமையான போட்டிகளமாக மாற இருக்கிறது. ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் 2 மாதங்களே இருப்பதால் போட்டிகள் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க வழக்கமாக ஒவ்வொரு பிக்பாஸ் போட்டியாளர்களும் எதிர்கொள்ளும் எலிமினேஷன் ப்ராசஸ் இந்த வாரமும் நடைபெற இருக்கிறது.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் மயூவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – ரசிகர்கள் உற்சாகம்!
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அபிநய், அக்ஷரா ரெட்டி, சிபி, இசைவாணி, ஐக்கி பெரி, நிரூப், மதுமிதா, பாவனி ரெட்டி, சுருதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கான வோட்டிங் ப்ராசஸ் முடிவடைந்த நிலையில் இவர்களில் மிக குறைந்த வாக்குகளை அபிநய் மற்றும் சுருதி பெற்றிருப்பதாக தெரிகிறது. அதனால் இந்த வார வோட்டிங்கில் கடைசியாக இருக்கும் இவ்விருவரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.