‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுகிறாரா பரீனா? அடுத்தகட்ட கதைக்களம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா கதாபாத்திரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது போல கதை அமைந்துள்ளது. இதனால் இவர் சீரியலில் இருந்து இடைவெளி எடுக்க இருக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவி சீரியல்களில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பல மொழிகளில் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் TRP ரேட்டிங்கில் டாப் சீரியலில் ஒன்றாகவும் பாரதி கண்ணம்மா உள்ளது. இந்த சீரியல் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று வருகிறது. இந்த சீரியலில், ஹீரோ பாரதி மற்றும் ஹீரோயின் கண்ணம்மாவை விட இளம் வில்லியாக கலக்கி கொண்டிருக்கும் வெண்பா கதாபாத்திரம் தான் கதைக்கு ஆணிவேராக இருக்கிறது.
‘பாக்கியலட்சுமி’ சீரியல் மயூவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். அவர் தற்போது நிஜ வாழ்க்கையில் 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாதம் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. தற்போது சீரியலில் வெண்பா கதாபாத்திரம் சிறையில் அடைக்கப்பட்டது போல காட்டப்பட்டுள்ளது. அதேபோல பாரதி இன்னும் நம்பாமல் வெண்பாவிற்கு உதவி செய்ய இருக்கிறார். சிறையில் இருக்கும் போது கூட வெண்பா பாரதி, கண்ணம்மாவை பிரிக்க சதித்திட்டம் தீட்டுகிறார்.
வெண்பா ஜெயிலில் அடைக்கப்படுவதை பார்த்தால், பிரசவத்திற்காக சீரியலில் இருந்து கேப் எடுக்க போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அவர் நிறைமாத கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு சீரியலில் இருந்து ஓய்வு தேவைப்படுகிறது. இதனால் அவர் கொஞ்ச காலம் சீரியலில் இருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெண்பா கதாபாத்திரம் இல்லாமல் சீரியலில் எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் மறுபுறம் புதிய கண்ணம்மா என்ட்ரி வேற இருக்கிறது. அதனால் சீரியல் கதைக்களத்தில் என்ன தான் நடக்க இருக்கிறது என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.