பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.. அதிகரித்த கட்டணம் – தொடர் விடுமுறை எதிரொலி!
தமிழகத்தில் அடுத்த வாரம் தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வரும் நிலையில், பேருந்து கட்டணத்தை தொடர்ந்து, விமான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கட்டணம் குறித்த விவரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
விமான கட்டணம் உயர்வு:
தமிழகத்தில் அடுத்த வாரம் நவராத்திரி தொடங்கி விடும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் தசரா, ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை நாட்கள் வரும். அதனால் மக்கள் பலர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அது மட்டுமில்லாமல் ஆம்னி பேருந்துகளில் கட்டணமும் ராக்கெட் வேகத்தில் அதிகமாகி வருகிறது.
அதனால் மக்கள் அடுத்த வழியாக விமானத்தில் பயணம் செய்யலாம் என முடிவு செய்து இருக்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதத்தில் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூா் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ. 4000 விமான கட்டணம் இருந்து வரும் நிலையில் தற்போது ரூ. 6000-மாக உயர்ந்துள்ளது
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியீடு!
அதே போல ஜெய்ப்பூருக்கு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 24 ஆயிரம் ரூபாய் வரையும், கொல்கத்தாவிற்கு15 ஆயிரம் ரூபாயில் இருந்து 22 ஆயிரம் ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. மேலும் அகமதாபாத்திற்கு 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாய் வரையும், புனேவிற்கு 9 ஆயிரம் ரூபாய் வரையிலும், மும்பைக்கு 16 ஆயிரம் ரூபாய் வரையும், மதுரைக்கு ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரையும் கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்