அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ் – பென்சன் பணம் கொடுக்க முடியாது!
2022-23ஆம் ஆண்டுக்கான ராஜஸ்தான் மாநில பட்ஜெட் உரையின் போது அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக தேசிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள நிதியை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மத்திய அரசு அறிவிப்பு:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அவர்களுக்குப் பின்பு குடும்பத்துக்கு அத்தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. ஆனால், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது கிடையாது; பணிக்கொடை, மருத்துவ காப்பீடு போன்ற எந்த பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது.
Exams Daily Mobile App Download
2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வந்த இந்தப் புதிய பங்களிப்பு திட்டத்தை எதிர்த்து, அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சுமார் 19 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். அண்மைக்காலமாக இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 23ம் தேதி தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால், சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பரிசீலித்து வருகிறது.
ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
இதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ராஜஸ்தானில் அமல்படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேசிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள சுமார் 39,000 கோடி ரூபாய் நிதியை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராஜஸ்தான் அரசு கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசு, தேசிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை ராஜஸ்தான் அரசுக்கு வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. தேசிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை மாநில அரசுக்கு திருப்பிச் செலுத்தவோ, வருவாய் வரவாக வழங்கவோ முடியாது என பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.