தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை – சங்கம் வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை - சங்கம் வலியுறுத்தல்!
தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை - சங்கம் வலியுறுத்தல்!
தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை – சங்கம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதனால் ஆசிரியர்கள் சங்கம் முக்கிய கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளனர்.

ஆசிரியர்கள் வலியுறுத்தல்:

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. அத்துடன் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா பரவலின் பாதிப்பு 23 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

போலீசார் கவனத்திற்கு – ஜன.26 விடுமுறை ரத்து! முக்கிய அறிவிப்பு!

இதனை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஜனவரி 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 முதல் 18 வயது உடையவர்களுக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதையடுத்து மாணவர்களே இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்கள் யாருக்காக பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – தமிழ் மொழியில் செயலி!

அதனால் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். பள்ளிகளில் மாணவர்கள் இல்லாத நேரத்தில் ஆசிரியர்களை வர வைப்பது தேவையில்லை என்றும் சுழற்சி முறையில் ஆசிரியர்களை பள்ளிகளுக்கு வர வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அத்துடன் சனிக்கிழமைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!